சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை கவனத்தில் கொள்ள தேவையில்லை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தை, கவனத்தில் கொள்ள தேவையில்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
Updated on
1 min read

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தை, கவனத்தில் கொள்ள தேவையில்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மதுரை வந்த அவரிடம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மக்களா, விடுதலைப் புலிகளா அல்லது நக்ஸலைட்களா என்ற உண்மை விசாரணைக்குப் பிறகே தெரியும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு வைகோ பதிலளிக்கையில், சுப்பிரமணியன் சுவாமி யார் மீதும் பழிபோடுவார். மனதில் தோன்றியதை யோசிக்காமல் அப்படியே கூறுவார். அவர் கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள தேவையில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com