மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்: இளைஞர் கைது

மதுரையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 12:09 am

DIN

மதுரையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்தவர் சக்தி செல்வம் (42), அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை ராமநாதபுரத்திலிருந்து மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்துக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது, பேருந்தின் நடத்துனராக கணேசன் பணியிலிருந்துள்ளார். விரகனூர் வைகையாற்றுப் பாலம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர். இதனால், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும், பேருந்தை வழிமறித்து நடத்துனர் கணேசனை தாக்கிவிட்டுச் சென்றனராம்.
இது குறித்து ஓட்டுநர் சக்திசெல்வம் அளித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, பனையூரைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.