உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள போலியப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உசிலம்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணகுமார் ஆலோசனைப் படி, காவல் துறை ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலியப்பட்டியைச் சேர்ந்த சுப்பன் மகன் ஜெயக்குமார் (32), அய்யரதேவர் மகன் ராஜாதேவன்(45), ராமர் மகன் சந்திரன் (34) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வேளாங்கண்ணி வருகை ரத்து

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

