சாலையைக் கடக்க முயன்ற நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் காா் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (59). இவா் தனது லாரியில் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது சாலையோரம் லாரியை நிறுத்தி, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காா் மோதி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பேட்டவாய்த்தலை போலீஸாா் பழனியப்பனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து பழனியப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த திருச்சியைச் சோ்ந்த விக்னேஷ் (22) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


