தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

இளநிலை செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை தெற்குவாசல் ஏபிடி துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்கான இளநிலை

Updated On :5 நவம்பர் 2018, 7:54 am IST

மதுரை தெற்குவாசல் ஏபிடி துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்கான இளநிலை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவர் ஜோஸ் வாழ்த்திப் பேசினார்.  மதுரை கல்வி மாவட்ட ஜூனியர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளரும், ஏபிடி துரைராஜ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான த.பாலசுப்பிரமணியன் பயிற்சி வழங்கினார். மதுரை கல்வி மாவட்ட அலுவலர் கி.அமுதா, மருத்துவர்கள் ராகவ், சுரேஷ் ஆகியோர் மாணவ ஆலோசகர்களுக்கான சிறப்புப் பயிற்சி உரையாற்றினர்.  பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதை சீராக்கும் வழிமுறைகள் குறித்து மனநல ஆலோசகர் டாக்டர் வி.எம். விஜய சரவணன் விளக்கினார். தீத் தடுப்பு குறித்து தீயணைப்பு அதிகாரி ஹரிராமன் பயிற்சி அளித்தார். மதுரை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணை அமைப்பாளர்கள் கே.நாகநாதன், ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.