மதுரை தெற்குவாசல் ஏபிடி துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்கான இளநிலை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவர் ஜோஸ் வாழ்த்திப் பேசினார். மதுரை கல்வி மாவட்ட ஜூனியர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளரும், ஏபிடி துரைராஜ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான த.பாலசுப்பிரமணியன் பயிற்சி வழங்கினார். மதுரை கல்வி மாவட்ட அலுவலர் கி.அமுதா, மருத்துவர்கள் ராகவ், சுரேஷ் ஆகியோர் மாணவ ஆலோசகர்களுக்கான சிறப்புப் பயிற்சி உரையாற்றினர். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதை சீராக்கும் வழிமுறைகள் குறித்து மனநல ஆலோசகர் டாக்டர் வி.எம். விஜய சரவணன் விளக்கினார். தீத் தடுப்பு குறித்து தீயணைப்பு அதிகாரி ஹரிராமன் பயிற்சி அளித்தார். மதுரை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணை அமைப்பாளர்கள் கே.நாகநாதன், ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


