தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழந்தை பருவ புற்று நோய்கள் எளிதில் குணப்படுத்தக்கூடியவை: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

குழந்தைப்பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை உடனடியாக கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:20 am

குழந்தைப்பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை உடனடியாக கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவத்தில்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் மருத்துவமனையின் குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை குருதியியல் சிகிச்சை நிபுணர் ந.ஜெயபோஸ் சிறப்புரையில் பேசியது:  புற்றுநோயை முன்னதாகவே கண்டறிந்து உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 
 உலகிலுள்ள மொத்த குழந்தை புற்றுநோயாளிகளில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர்.  மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 2010-இல் குழந்தைப்பருவ குருதியியல் மற்றும் புற்றுநோயியல் துறை தொடங்கப்பட்டது. இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 800 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவர்களுக்கான புற்றுநோய் போல இல்லாமல், குழந்தைப்பருவ புற்றுநோய்கள் அதிகளவில் குணப்படுத்தக்கூடியவை.  மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 75 சதவீதம் குழந்தைகள் குணமடைந்துள்ளனர். இங்கு சிகிச்சைப்பெற்றுள்ள  குழந்தைகளில்  80 சதவீதம் பேர் ஏழ்மையான பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுகிற மற்றும் ஏழை குழந்தைகளின் நலனுக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயங்கி வரும் கமீலா குழந்தைகள் புற்றுநோய்  நிதியத்திலிருந்து உதவி செய்யப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் குருதியாக்க ஸ்டெம்செல் துறைத்தலைவர்  டி.காசி விஸ்வநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில் புற்றுநோயிலிருந்து மீண்ட  200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்று சிகிச்சை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  புற்றுநோயிலிருந்து மீண்டு, தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.