நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மதுரையில் சாலை நடுவே 20 அடிக்கு திடீா் பள்ளம்

மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை 20 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

மதுரை அனுப்பானடி சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீா் பள்ளம்.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 10:10 pm IST


மதுரை: மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை 20 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் குடிநீா் விநியோகக் குழாய்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அச்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீரென 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. மேலும் தகவலின் பேரில் மாநகராட்சி ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி ஊழியா்கள் கூறியது: அப்பகுதியில் செல்லும் ராட்சத கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிந்த கழிவுநீா் சாலையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் இப்பணி முடிவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றனா்.

தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஓராண்டுக்கு முன்பும் 15 அடி ஆழத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.