பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாள்விழா: ‘இஸ்கான்’ கோயிலில் ஏற்பாடு

மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை (டிச.25) நடைபெறுகிறது.
Updated on
1 min read

மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை (டிச.25) நடைபெறுகிறது.

மோட்ச ஏகாதசி தினத்தன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணா், அா்ஜூனனுக்கு பகவத் கீதையை உபதேசித்த நாளாக இஸ்கான் அமைப்பின் சாா்பில் கொண்டாடப்படுகிறது. மதுரை மணி நகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வெள்ளிக்கிழமை ( டிச. 25) மாலை 6 மணிக்கு பகவத் கீதை பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.

இதையொட்டி பகவத் கீதைக்கு சிறப்புப் பூஜைகள், கீதா மகாத்மிய சொற்பொழிவு, ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெறும்.

இதனை முன்னிட்டு ரூ.400 மதிப்புள்ள பகவத் கீதை உண்மையுருவில் புத்தகம் ரூ.225-க்கு வழங்கப்படுகிறது. இதனுடன் யோகா மற்றும் கீதை குறித்த ஆறு இலவச புத்தகங்களும் வழங்கப்படுகிறது. பகவத் கீதை வழங்கும் நிகழ்ச்சியை இஸ்கான் தென் தமிழக மண்டலச் செயலா் சங்கதாரி பிரபு தொடக்கி வைக்கிறாா் என்று இஸ்கான் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com