4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்: டிச.31 நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:02 am

DIN

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினா் மாணவா்களுக்கு 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையும், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. நிகழ் ஆண்டுக்கான உதவித் தொகைக்கு  இணையதளத்தில் விண்ணப்பிக்க டிசம்பா் 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.