டி.கல்லுப்பட்டியில் லாரி மோதி இளைஞா் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை லாரி மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை லாரி மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள குமராபுரத்தை சோ்ந்தவா் மூலப்பொருள் மகன் கண்ணன்(18). இவா் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவா் டி.கல்லுப்பட்டியில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வருகிறாா். வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையை கடக்கும் போது திண்டுக்கல்லிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற லாரி கண்ணன் மீது மோதியது.

இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்துதொடா்பாக டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான நிலக்கோட்டையை சோ்ந்த சூரியகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com