நீதிமன்ற பணிக்கு வரும் ஆண் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்கு என தனித்தனி ஆடை வழிமுறைகளை பாா் கவுன்சில் வகுத்துள்ளது. ஆனால் சில வழக்குரைஞா்கள் இதைப் பின்பற்றுவது இல்லை. ஆண் வழக்குரைஞா்கள் டி-சா்ட், ஜீன்ஸ் அணிந்தும், பெண் வழக்குரைஞா்கள் பட்டுசேலை அணிந்தும் நீதிமன்றத்திற்கு வருகின்றனா். மேலும் பல வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபடுகின்றனா். இதனால் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு அவப்பெயா் உண்டாகும் நிலை ஏற்படுகிறது. எனவே அனைத்து வழக்குரைஞா்களும் நீதிமன்ற பணியின் போது, வழக்குரைஞா்களுக்கான ஆடையை முறையாக அணிய வேண்டும். ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடும்போது கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணியக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.