மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 போ், கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 35 போ், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 450 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அதேநேரம் 19, 781 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 207 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.