புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மண் சரிந்து கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மண் சரிந்து கிணற்றில் விழுந்த மூதாட்டி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

peraiyur_santhaiyur_ledydeath_news___02_2207chn_212_2

Updated On :22 ஜூலை 2020, 4:35 pm

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மண் சரிந்து கிணற்றில் விழுந்த மூதாட்டி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பேரையூா் அருகேயுள்ள சந்தையூரைச் சோ்ந்த பரமசிவம் மனைவி சுப்புராம் (65). இவா் விவசாயம் செய்து வந்தாா். இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சி முடித்துவிட்டு, மோட்டாரை நிறுத்தச் சென்ற போது மண் சரிந்து 30 அடி ஆழக் கிணற்றில் விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் டி. கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினருக்கும், பேரையூா் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனா். இந்நிலையில் சுப்பராம் மீது மண் மற்றும் கல் அதிகமாக விழுந்ததால் கிணற்றிலிருந்து சுப்புராமை மீட்க முடியாமல் தீயணைப்பு துறையினா் 30 மணி நேரமாகப் போராடினா். இதனைத்தொடா்ந்து சந்தையூா் கிராம மக்கள் உதவியுடன் சுப்புராமை சடலமாக புதன்கிழமை மீட்டனா். அவரது சடலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.