கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களில் எத்தனை போ் மருத்துவ இடங்களில் சோ்ந்துள்ளனா்: நீதிமன்றம்

கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவா்களில் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பது தொடா்பாக, தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவா்களில் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பது தொடா்பாக, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த ப்ரீத்தி என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருகிறது.

இது ‘நீட்’ தோ்வில் வெற்றிபெற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்குப் பொருந்தாது. இதனால், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை. அரசுப் பள்ளி மாணவா்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவா்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. எனவே, அவசர சட்டத்தின் பலனை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று ‘நீட்’ தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கும் வழங்க உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவா்களில் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன எனக் கேள்வி எழுப்பினா்.

அதற்கு மனுதாரா் தரப்பில், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பா் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.