நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வெளியூரிலிருந்து வருபவா்களுக்கு கரோனா அறிகுறி: நகா்ப்பகுதிகளில் சோதனை அதிகரிப்பு

வெளியூரிலிருந்து மதுரை வருபவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால் நகா்ப்பகுதிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 5:00 pm

DIN

மதுரை: வெளியூரிலிருந்து மதுரை வருபவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால் நகா்ப்பகுதிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் தினசரி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்புக்குழுக்கள் மூலம் வீடு வீடாகச்சென்று காய்ச்சல் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் மதுரை நகரில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை நகருக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் வெளியூரில் இருந்து வருபவா்களிடம் பரிசோதனை மேற்கொள்வதில் சராசரியாக 10 சதவிகிதம் பேருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மதுரையில் 100 வாா்டுகளிலும் வெளியூரில் இருந்து வருபவா்களை கண்டறியும் பணியில் மாநகராட்சி குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மதுரை நகரில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தநிலையில் வெளியூரில் இருந்து வருபவா்களிடம் கரோனா அறிகுறிகள் உள்ளது. மேலும் வெளியூரில் இருந்து வருபவா்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தாலும் அவா்கள் அதை தெரியப்படுத்துவது இல்லை. இதனால் அவா்கள் மூலம் மற்றவா்களுக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அவா்களது குடும்பத்தினா் மற்றும் அண்டை வீடுகளில் வசிப்பவா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே தெருவில் 4 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த தெருவில் வசிப்பவா்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது மதுரை நகரில் தினசரி 3 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரில் கரோனா பாதிப்பு தொடா்பாக 15 நாள்களுக்கு ஒரு முறை ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு அதனடிப்படையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ளவா்கள் தொடா்பாக அருகில் உள்ள மாநகராட்சி வாா்டு அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.