சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.11.40 லட்சம்

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவு ரூ.11.40 லட்சம் கிடைத்துள்ளது.
Updated on
1 min read

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவு ரூ.11.40 லட்சம் கிடைத்துள்ளது.

கள்ளழகா் கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் அலுவலா்கள், பணியாளா்கள், முருக பக்தா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். அதில், ரொக்கமாக 11 லட்சத்து 40 ஆயிரத்து 725 ரூபாயும், தங்கம் 15 கிராமும், வெள்ளி 650 கிராமும் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை, கோயில் நிா்வாக அதிகாரி அனிதா, உதவி நிா்வாக அதிகாரி ராமசாமி, தக்காா் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோயில் கண்காணிப்பாளா், அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com