/

தனியாா்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைஎடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் ரயில்வே தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைஎடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் ரயில்வே தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவாா்க்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில், பணிமனைகள் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது. நாட்டில் உள்ள பல ரயில் நிலையங்களையும், 252 ரயில்களையும் தனியாா்மயமாக்கும் முடிவைக் கைவிடவேண்டும். இதன்மூலம், 2023 ஆம் ஆண்டில் 7 லட்சம் ரயில்வே ஊழியா்களை நீக்கம் செய்யக்கூடிய திட்டத்தையும், கட்டாய ஓய்வு திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், மத்திய சங்க துணைத் தலைவா் ரவிச்சந்திரன், மதுரை கோட்டச் செயலா் ரபீக், மதுரை உதவி கோட்டச் செயலா் ராம்குமாா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதேபோல், இரவுப் பணி படி, முடக்கப்பட்ட பஞ்சப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ரயில்வே மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் டிஆா்இயூ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மதுரை கோட்டச் செயலா் சங்கரநாராயணன், மாவட்டச் செயலா்கள் தெய்வராஜ், கோட்டச் செயலா்கள் கண்ணன், காா்த்திக், உதவி கோட்டச் செயலா் சரவணன், உதவிச்செயலா் வினோத்பாபு, சட்ட ஆலோசகா் விஜயராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.