27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நிஜ பின்னணியில் தடயம்

சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'. நவீன்குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2026, 4:15 pm IST

சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'. நவீன்குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். 1990-களில் திருத்தணியையொட்டி தமிழக } ஆந்திர எல்லையோரக் கிராமங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லையோரக் கிராமங்களில் நடு இரவில் நிகழ்ந்த தொடர் கொலைகள், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும், பதிலற்ற கேள்விகளையும், மர்மத்தையும் உருவாக்கின. பணம், நகை, கொள்ளை போகவில்லை என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் கணவரின் அரைஞாண் கயிறும், மனைவியின் தாலியும் மட்டும் திருடப்பட்டிருந்தன. அதன் பின்னணியில் இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தின் முன்னால் எளிய மக்களின் வாழ்க்கை என்பது எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டு இதன் கதைக் கரு உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல், அதிகாரத்தின் விலங்குகளிலிருந்து எளிய மக்களால் தப்பிக்கவே முடியாது என்பதை விவரிக்கிறது திரைக்கதை. தகவல் தொழில்நுட்பங்கள் இல்லாத 1990-களில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி, இந்தத் தொடர் மனதை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.

சமுத்திரக்கனி போலீஸ் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார். ஷிவதா இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். மூணாறு ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1990-களின் இறுதியில் கிராமப்புறப் பின்னணியில் மிகவும் எதார்த்த களத்தில் உருவாக்கப்பட்ட இத்தொடர் கடந்த 27-ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.