எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அஜீத் பவார் மரணத்துக்குப் பின்னணியில் அரசியல்? - சரத் பவார் பதில்!

அஜீத் பவார் மரணத்துக்கு யார் காரணம்? “அரசியலாக்க வேண்டாம்!” - சரத் பவார்

News image

அஜீத் பவார் - PTI

Updated On :28 ஜனவரி 2026, 10:14 pm IST

அஜீத் பவார் மரணத்துக்குப் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றி சரத் பவார் பதிலளித்துள்ளார். அஜீத் பவார் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்திருப்பதாகவும், இந்நேரத்தில் இவ்விவகாரத்தை எவரும் அரசியலாக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மும்பையிலிருந்து மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாருடன் சேர்த்து மொத்தம் 5 பேருடன் புதன்கிழமை(ஜன. 28) காலை 8.10 மணிக்கு பாராமதிக்குப் புறப்பட்ட லியர்ஜெட் 46 விமானம் 8.45 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகியது. பாராமதியில் காலை 8.50 மணிக்கு தரையிறங்கும்போது விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் அந்த விமானத்திலிருந்தவர்கள் அனைவரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜீத் பவாரின் மரணம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, சரத் பவாருடன் இணைவது குறித்து பரிசீலித்து வந்தார். இன்று நடந்த சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது” என்று பேசி அவர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், அஜீத் பவார் மரணம் குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (சரத் பவார் அணி) சரத் பவார் தெரிவித்திருப்பதாவது : “இதில் அரசியல் ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க ஒரு விபத்து. இந்த விபத்து மிகுந்த துயரத்தை எனக்கும் ஒட்டுமொத்த மகாராஷ்டிரத்துக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தருணத்தில் ஒவ்வொருத்தரிடமும் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே, இந்தத் துயரத்தை அரசியலாக்காதீர்!” என்று தெரிவித்தார்.

Summary

Sharad appealed to people not to politicise the tragedy and termed the crash in Baramati a “pure accident”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.