திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்து சரத் பவார் கூறுகையில்

News image

சரத் பவார் - ANI

Updated On :31 ஜனவரி 2026, 3:18 pm IST

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்கவிருக்கும் நிலையில், அது பற்றி தன்னிடம் கலந்தாலோசனை செய்யப்படவில்லை என்று சரத் பவார் கூறியிருக்கிறார்.

புதன்கிழமை காலை நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜீத் பவார் பலியான நிலையில், அவர் வகித்து வந்த துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுநேத்ரா பவார் ஏற்கவிருக்கிறார்.

அஜீத் பவார் வகித்து வந்த பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவில், நீங்கள் ஓரம்கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எனக்குத் தெரியவில்லை என்று சரத் பவார் பதிலளித்திருக்கிறார்.

அரசியலுக்கும், குடும்பத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்திருப்பது சரத்பவாரின் பேச்சின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்கவிருக்கிறார் என்பதை, செய்திகள் மூலமாகத்தான் தான் அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

அதாவது, பாராமதியில், செய்தியாளர்களை சந்தித்த சவரத் பவார், துணை முதல்வர் பதவியேற்பு விழா பற்றி எதுவும் தெரியாது. அது பற்றி செய்திகள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

மேலும், மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ராவை பதவியேற்கும் நடவடிக்கைகளில் பிரஃபுல் படேல் மற்றும் சுனில் தத்காரே ஆகியோர்தான் முன்னெடுத்திருப்பார்கள் என்று கருதுகிறேன். இவர்கள் ஏதேனும் ஒன்றை முடிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அஜீத் பவார், இரு தரப்பையும் ஒன்றிணைக்க நினைத்திருந்தார். அவரது எண்ணம் நிறைவேற வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். பிப்ரவரி 12ஆம் தேதி இரு அணிகளையும் ஒன்றாக இணைக்கவும் அஜீத் பவார் திட்டமிட்டிருந்தார். ஆனால், கெடுபயனாக அவர் அதற்கு முன்பே நம்மை விட்டுச் சென்றுவிட்டார் என்று சரத் பவார் கூறியுள்ளார்.

ஜன.28ஆம் தேதி நேரிட்ட விமான விபத்தில் துணை முதல்வர் அஜீத் பவார் பலியான நிலையில், தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவையில், அஜீத் பவாரின் மனைவி சுநேத்ராவுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுந்த நிலையில், இன்று அவர் துணை முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

Sharad Pawar on giving deputy chief minister post to Sunetra Pawar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.