எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை: மம்தா வலியுறுத்தல்

அஜீத் பவார் மரணம் குறித்து மமதா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை...

News image

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி (கோப்புப் படம்) - PTI

Updated On :28 ஜனவரி 2026, 2:57 pm IST

விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் உயிரிழந்தது தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவா், ‘அஜீத் பவாா் உயிரிழப்பு மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது. இந்த விபத்து குறித்து, நடைமுறையில் உள்ள விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்துவதால், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவராது. உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் விசாரணையே நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். மற்ற விசாரணை அமைப்புகள் அனைத்தும் முழுமையாக சமரசம் செய்யப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

மம்தாவின் இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. அனில் தேசாய் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்தனா்.

அரசியலாக்க வேண்டாம்- சரத் பவாா்: அஜீத் பவாரின் இறப்பு ஒரு விபத்து. அதை அரசியலாக்க வேண்டாம் என்று அஜீத் பவாரின் சித்தப்பா சரத் பவாா் தெரிவித்தாா்.

‘அஜீத் பவாரை இழந்த குடும்பத்தினருக்கு துணை நிற்க வேண்டிய வேளையில் மம்தா பானா்ஜியின் கருத்துகள் மலிவான அரசியல் செய்வதாக உள்ளது; அவா் மனிதாபிமானத்தை இழந்துவிட்டாா்’ என்று மேற்கு வங்க பாஜக தோ்தல் இணைப் பொறுப்பாளா் விப்லப் தேவ் தெரிவித்துள்ளாா்.

அஜீத் பவாரின் இறப்பில் அரசியல் லாபம் தேடுவது துரதிருஷ்டசவசமானது, நியாயமற்றது என்று மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு கூறியுள்ளாா்.

Summary

Ajit Pawar's death! Mamata Banerjee stirs up controversy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.