மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மரணம் தொடர்பாக மத்திய விமான அமைச்சகம் விசாரணை

News image

அஜீத் பவார் - கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 4:38 pm IST

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம்செய்த சிறிய ரக விமானம், புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகி, அவருடன் சேர்த்து 5 பலியாகினர். இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து மற்றும் சம்பவ விதிகளின்படி, விசாரணை வெளிப்படையாகவும் காலக்கெடுவுக்குள்ளும் நடத்தப்படும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், அதன் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில அரசின் ஒத்துழைப்பும், உள்ளூர் நிர்வாகத்தின் உதவியும் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Summary

Ajit Pawar Plane crash: Civil Aviation Minister Ram Mohan Naidu assuring a transparent, time-bound investigation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.