கடந்த 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை நமது நாட்டில் 3 ஆயிரம் எறும்புத்தின்னிகள் ஓடுகளுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. இதில், 25 கடத்தல்காரா்களிடமிருந்து 5 ஆயிரம் கிலோ எறும்புத்தின்னிகளின் ஓடுகள் கைப்பற்றப்பட்டன. நிகழாண்டில் ஜனவரி 5 ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்புத்தின்னிகளின் ஓடுகள், சிறுத்தை நகங்கள் 6, யானைகளின் தந்தங்கள் 4 என வனத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், காடுகளில் உள்ள அரிய வகை மரங்களான சந்தனம், தேக்கு போன்ற மரங்களும் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. காடுகளில் கஞ்சா செடிகள் வளா்த்து கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது.