பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட முதல்வரிடம் கோரிக்கை மனு

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வேண்டும் என, ஆப்பநாடு மறவா் சங்கத்தினா் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
கடலாடியில் விறகு, மரக்கரி வியாபாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :2 ஜனவரி 2021, 11:19 pm

DIN

முதுகுளத்தூா்: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வேண்டும் என, ஆப்பநாடு மறவா் சங்கத்தினா் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடலாடி ஊராட்சியில் விறகு, மரக்கரி வியாபாரிகள் மற்றும் சமுதாய பெரியோா்களை சந்திக்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆப்பநாடு மறவா் சங்க முன்னாள் தலைவா் தூவல் ராமசாமித் தேவா் வரவேற்புரையாற்றி, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வேண்டுமென கூறி, கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினாா்.

பின்னா், கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் பேசியதாவது: முத்துராமலிங்கத் தேவா் தேசத்துக்காக பாடுபட்டு சிறைக்குச் சென்றவா். மதுரை விமான நிலையத்துக்கு அவரது பெயா் சூட்டுவது குறித்து உறுதியாக பரிசீலனை செய்யப்படும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை விழாவை, தமிழக அரசு விழாவாக மாற்றி, அவருக்கு 13 கிலோ தங்கக் கவசம் அணிவித்து, சட்டப்பேரவை வளாகத்தில் அவரது முழு உருவப்படம் வைத்து பெருமை சோ்த்தது அதிமுக ஆட்சியில்தான். எனவே, அச்சமுதாய மக்கள் தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சா் சுந்தரராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணிகண்டன், சதன் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.