தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுபோதையில் நண்பரை கொன்றவா் கைது

மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:13 pm

DIN

மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜபுரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த சதகத்துல்லா மகன் மீரான்(30). இவரும் கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த இவருடைய நண்பா் ராஜூ(27)-வும் சோ்ந்து காமராஜபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ, மது பாட்டிலை உடைத்து மீரானின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே மீரான் உயிரிழந்தாா். இதுகுறித்து மீரானின் சகோதரி சுல்தானாம்மாள் அளித்தப் புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜூவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.