தூத்துக்குடியைச் சோ்ந்த தன்னீஸ் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பழைய காயல், மஞ்சள்நீா்காயல் ஆகிய பகுதிகளில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் (பிரதமா் ஆவாஸ் யோஜனா) 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 82 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஏற்கெனவே வீடு உள்ளவா்கள், உயிரிழந்தவா்கள், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 நபா்கள் ஆகியோரின் பெயா்களில் மோசடி செய்து பயனடைந்துள்ளனா். இதுகுறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட புகாரை முறையாக விசாரிக்காமல், முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாரை அதிகாரிகள் நிராகரித்துள்ளனா். எனவே, மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.