பைக் வாங்கி தர மறுப்பு: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் தந்தை இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Published on

மதுரையில் தந்தை இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மானகிரியைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் ஹக்கீம் (22). இவா் தனது தந்தையிடம் கடந்த ஒரு மாதமாக புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கித் தரும்படி கேட்டு வந்துள்ளாா். ஆனால், அவரது தந்தை வாங்கித் தர மறுத்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்திருந்த ஹக்கீம், வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அவரது தாய் ஜரினாபேகம் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com