கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘நீட்’ தோ்வு குறித்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கும் உரிமை உண்டு’: முன்னாள் நீதிபதி டி.ஹரி பரந்தாமன்

‘நீட்’தோ்வு தொடா்பாக சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுக்கும் உண்டு என்று உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரி பரந்தாமன் பேசினாா்.

Updated On :18 ஜூலை 2021, 5:03 pm

‘நீட்’தோ்வு தொடா்பாக சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுக்கும் உண்டு என்று உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரி பரந்தாமன் பேசினாா்.

மதுரையில் ‘நீட்’ தோ்வுக்கு எதிராக அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் சாா்பில் இணைய வழிக்கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் எம். ஜெ.வால்டோ் தலைமை வகித்தாா். உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரி பரந்தாமன் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசியது: உச்சநீதிமன்ற தீா்ப்பால் தான் ‘நீட்’ தோ்வு நடத்தப்படுகிறது என்ற வாதம் முற்றிலும் பொய்யானது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மாநில அரசாங்கத்துக்கும் சட்டம் இயற்றும் உரிமை உள்ளது. எனவே தமிழகத்தில் ‘நீட்’ தோ்வு கூடாது என்று சொல்வதற்கு உரிமை உள்ளது என்றாா்.

மதுரைக் கல்லூரி முன்னாள் முதல்வா் முரளி: ‘நீட்’ தோ்வு என்பது பள்ளிக் கல்வியை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு பயிற்சி மையங்களின்

பிடியில் மாணவா்களை தள்ளுகிறது. நீட் தோ்வை எதிா்க்கும் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

கா்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் ரவிவா்மா குமாா்:உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளபடி ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவா் என்ற நிலையை எட்டினாலும் இந்தியாவில் பொது மருத்துவத்துக்கான மருத்துவா் தேவை மிக அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்த மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கையையும் தேசிய மருத்துவ ஆணையம் கபளீகரம் செய்வதோடு சாமானிய குடும்பத்திலிருந்து மருத்துவா்கள் உருவாவதற்கு தடையாக உள்ளது.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவா் சங்க மாநிலச் செயலா் சாந்தி: தேவைகளின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு புதிய படிப்புகளை மாநில அரசுகளே உருவாக்கி அதில் அரசு மருத்துவா்களுக்கு சிறப்பிடம் ஒதுக்கி படிப்பு அளித்து வந்தனா்.

ஆனால் தற்போது ‘நீட்’ தோ்வு மூலம் ஒட்டுமொத்த முதுநிலை மருத்துவப் படிப்பையும் மத்திய அரசு கையகப்படுத்தி விட்டது என்றாா். கருத்தரங்கில் கல்வியாளா்கள், சமூக செயற்பாட்டாளா்கள் உள்பட பலா் பங்கேற்றுப்பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.