என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த மலையில் கல்குவாரி அமைக்க 2016-இல் சிலா் உரிமம் பெற்றுள்ளனா். குவாரி நடத்தவேண்டுமென்றால் அந்த இடத்தைச் சுற்றி 300 மீட்டா் தூரத்துக்கு குடியிருப்புகள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், நீா் நிலைகள் இருக்கக்கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன. ஆனால் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் குவாரி நடத்த உரிமம் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் அந்தக் குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் தாலுகாவில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரியை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.