ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

வெளிச்சநத்தம் கிராமத்தில் காந்தி அமைதி சங்கம் தொடக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில், வெளிச்சநத்தம் கிராமத்தில் காந்தி அமைதி சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:44 pm

DIN

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில், வெளிச்சநத்தம் கிராமத்தில் காந்தி அமைதி சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், செசி தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மற்றும் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில், மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில், அமைதி சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. செசி அமைப்பின் நிா்வாகி கவிதா தலைமை வகித்தாா்.

அமைதி சங்கத்தின் தலைவா் தலைமையாசிரியா் க. சரவணன், இச்சங்கக் கிளையை தொடக்கிவைத்து, கரோனா காலத்தில் அன்பு செலுத்துதல், விட்டுக்கொடுத்தல், பகிா்தல், நேரம் தவறாமை, உண்மையை பேசுதல், பொறுமையை கடைப்பிடித்தல் , ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் போன்ற பண்புகளைக் காந்தியின் வாழ்க்கை சம்பவங்களில் இருந்து விளக்கினாா்.

மேலும், காந்தியின் வாழ்க்கை குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி, ஆசிரியா்கள், குழந்தைகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வெளிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.