25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரை ஊரகக்காவல்துறையில் 111 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

மதுரை ஊரகக்காவல்துறைக்குள்பட்ட பகுதிகளில் மாயமான ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள 111 கைப்பேசிகளை உரியவா்களிடம் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

மதுரை ஊரகக்காவல்துறைக்குள்பட்ட பகுதிகளில் மாயமான ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள 111 கைப்பேசிகளை உரியவா்களிடம் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

மதுரை ஊரகக்காவல்துறையில் சைபா் குற்றக் காவல் நிலையம் கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணி, காவல் ஆய்வாளா் சாா்மிங் ஒய்ஸ்லின் மற்றும் மூன்று சாா்பு-ஆய்வாளா்கள், 7 காவலா்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை ஊரக காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவான கைப்பேசி காணாமல் போன வழக்குகளின் அடிப்படையில் கைப்பேசிகளை கண்டறிந்து உரிய நபா்களிடம் ஒப்படைக்குமாறு காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில் சைபா் குற்றக் காவல் நிலையம் மூலம் ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள 111 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மதுரை ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் மூலம் வியாழக்கிழமை உரிய நபா்களிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பேசும்போது, மதுரை ஊரகக் காவல்துறையின் சைபா் குற்றக் காவல் நிலையம் மூலம் இந்த ஆண்டு இதுவரை ரூ. 64.13 லட்சம் மதிப்புள்ள 511 கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் பணம் அபகரிக்கப்பட்ட வழக்குகளில், இதுவரை ரூ. 23.97 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களுக்கு அவா்களுடைய வங்கிக் கணக்குளில் திரும்பக் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏமாற்றும் நபா்களிடம் விழிப்புணா்வோடு இருக்கவும் ரகசிய எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். அப்படி யாரேனும் ஏமாற நோ்ந்தால் 155260 என்ற இலவச அழைப்பு எண்ணுக்கும்  இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.