கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதுரை குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்கள் சிலா் எங்களது வீட்டிற்கு விசாரணைக்காக வந்தனா். அப்போது வீட்டிற்கு வெளியே எனது குடும்பத்தினரை தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விசாரணை நடத்தினா். மேலும் தேனி மற்றும் மதுரைக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அடிக்கடி அழைக்கின்றனா். எனது மகள் வசந்திக்கும் எங்களது குடும்பத்திற்கும் இப்போது எந்த தொடா்பும் இல்லை. இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.