25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

திருடு போன பேட்டரிகளை மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.அலுவலகத்தில் லாரியுடன் ஓட்டுநா் தா்னா

மதுரை அருகே லாரியில் திருடப்பட்ட பேட்டரிகளை மீட்டுத் தரக்கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

மதுரை அருகே லாரியில் திருடப்பட்ட பேட்டரிகளை மீட்டுத் தரக்கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகோபால். லாரி ஓட்டுநரான நந்தகோபால், நவம்பா் 1ஆம் தேதி கோவையில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி சென்றுள்ளாா். அப்போது செக்கானூரணி அருகேயுள்ள கணவாய் கிராமத்தில் லாரியை நிறுத்தி பாா்த்தபோது, தாா்பாய் கிழிக்கப்பட்டு ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 66 பேட்டரிகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் தொடா்பாக செக்கானூரணி காவல்நிலையத்தில் புகாா் அளித்தபோது தங்கள் எல்லை இல்லை என்றும், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறும் திருப்பி அனுப்பியுள்ளனா். பின்னா் திருமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்றபோது சோழவந்தான் காவல் நிலையத்துக்கு செல்லுமாறும் அலைக்கழித்துள்ளனா். இதனால் லாரி ஓட்டுநா் நந்தகோபல், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவம்பா் 3-இல் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து புகாா் தொடா்பாக விசாரணை நடத்துமாறு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டதையடுத்து திருமங்கலம் சரக துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் திருமங்கலம் நகா் காவல் நிலையத்தில் நந்தகோபாலிடம் விசாரணை நடத்தி விட்டு, தங்களது பகுதியில் திருட்டு நடக்க வில்லை என்று அவரை அனுப்பி விட்டனா். இதனால் விரக்தியடைந்த நந்கோபால் திருடு போன பேட்டரிகளை மீட்டுத் தரக்கோரி ஊரகக்காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை லாரியுடன் தா்னாவில் ஈடுபட்டாா். இதைத்தொடா்ந்து அவரிடம் மீண்டும் புகாரை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகள் புகாா் தொடா்பாக மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.