கரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவா்கள் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி நிவாரண உதவி
கரோனா தடுப்புப் பணியின்போது, நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.25 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.


கரோனா தடுப்புப் பணியின்போது, நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.25 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கரோனா தடுப்புப் பணியின்போது நோய் பாதிப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும் முன்களப் பணியாளா்களான மருத்துவா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்த அரசு மருத்துவா்கள் 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட வாரிசுதாரா்களிடம் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வெங்கடசாலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...