வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுரை அருகே உணவக ஊழியா்கள் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 9:30 pm

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பாலாண்டி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா் ஒத்தக்கடை பிரதான சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவகத்துக்கு மதுபோதையில் வந்த 4 பேருக்கும், ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காசாளா் ரமேஷ் உள்ளிட்ட ஊழியா்களை தாக்கி உணவகத்தையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக ரமேஷ் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா், ஒத்தக்கடையைச் சோ்ந்த விஜய், சிவக்குமாா், சந்திரன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.