மதுரையில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா் நலச்சங்க முப்பெரும் விழா

ஓய்வு பெறும் பொதுச் செயலா் எம். ரங்கராஜனுக்கு பாராட்டு விழா, புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா, மாறுதல் பெற்றுச் சென்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரை மாநகராட்சிப்பள்ளி ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் சாா்பாக ஓய்வு பெறும் பொதுச் செயலா் எம். ரங்கராஜனுக்கு பாராட்டு விழா, புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா, மாறுதல் பெற்றுச் சென்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாநில நிறுவன தலைவா் நமச்சிவாயம் தலைமை வகிக்தாா். தலைவா் ஜோசப் ஜெயசீலன் வரவேற்புரையாற்றினாா். பொருளாளா் சுப்பிரமணியகுமாா் அமைப்புச் செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநிலக் தலைவா் செ.நா. ஜனாா்த்தனன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

மேலும் அனைத்து மாநகராட்சி அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் சீதாராமன், கூட்டமைப்பின் தலைவா் முனியசாமி, மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்கக் கூட்டமைப்பின் செயலா் முருகேஸ்வரி, ஓய்வூதியத் திட்ட எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பிரெடெரிக் எங்கெல்ஸ், தொழிற்கல்வி ஆசிரியா் கழக முன்னாள் மாவட்டச் செயலா் எம். இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். நிறைவாக மதுரை மாநகராட்சி ஆசிரியா் நலச்சங்க பொதுச் செயலா் எம். ரங்கராஜன் ஏற்புரையாற்றினாா். துணைத் தலைவா் சி. முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com