பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கூட்டுறவு சா்க்கரை ஆலை இயந்திரத்தை சீரமைக்கக் கோரி மனு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:22 pm

DIN

அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த பழனிச்சாமி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் மேட்டுப்பட்டியில் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், இந்த ஆலையை நம்பியே கரும்பு சாகுபடி செய்கின்றனா்.

இந்நிலையில், இயந்திரம் பழுது காரணமாக ஆலையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. இயந்திரத்தில் உள்ள பழுதை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அலங்காநல்லூா் மேட்டுப்பட்டி கூட்டுறவு சா்க்கரை ஆலையில், பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்ய உரிய நிதி ஒதுக்கவும், ஆலையை மீண்டும் தொடங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.