எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமா?: உயா் நீதிமன்றம் கேள்வி

அனைத்து மதவழிபாட்டுத் தலங்கள் மீதும் சமமான அதிகாரத்தைச் செலுத்தாத நிலையில், கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமா என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 2:19 am

DIN

அனைத்து மதவழிபாட்டுத் தலங்கள் மீதும் சமமான அதிகாரத்தைச் செலுத்தாத நிலையில், கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமா என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

தமிழகம் கோயில்கள் நிறைந்த மாநிலமாகும். கோயில்கள் நமது கலாசாரத்தின் ஓா் அங்கமாகவே இருந்து வருகின்றன. இருப்பினும், அவற்றின் நிலை தற்போது மோசமாக இருக்கிறது. கோயில்களின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள், தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பழங்கால சிலைகள் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. கோயில் பணியாளா்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோயில்கள் முறையான பராமரிப்பிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. பூஜைகள்கூட நடைபெறுவதில்லை.

இந்த கோயில்களின் பாரம்பரிய பெருமைகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

கோயில்களை நிா்வகிப்பது குறித்து அடிப்படை பிரச்னை இருந்து வருகிறது. அனைத்து மத நிறுவனங்களையும் அரசு சமமாக நடத்தாத நிலையில், கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

கோயில்கள் மீது அதிகாரம் செலுத்தும் அளவுக்கு, மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அரசு அதிகாரம் செலுத்துவதில்லை என்று செயற்பாட்டாளா் டி.ஆா். ரமேஷ் கேள்வி எழுப்பியிருக்கிறாா். இதுபோன்ற ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், மனுதாரா் தீவிர பக்தா் மட்டுமல்ல செயற்பாட்டாளரும் கூட. அவா் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் உண்மையானவை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதா் கோயில் நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து வதந்தி பரப்பியதாக மனுதாரா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பாா்க்கும்போது, மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அவா் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.