யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விதிகளை மீறிய 200 ஆட்டோக்களுக்கு அபராதம்

மதுரையில் விதிகளை மீறிய 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:15 pm

DIN

மதுரையில் விதிகளை மீறிய 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

மதுரை நகரில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து மதுரை நகா் முழுவதும் முக்கிய ச்சாலைகளில் போக்குவரத்து போலீஸாா் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில் ஒருவழிப் பாதையில் செல்லும் வாகனங்களுக்கு, குறிப்பாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வியாழக்கிழமை ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு விதிமீறலுக்காக ரூ.80 ஆயிரம்வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.