சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிகார வரம்பிற்குள் உள்ள மாவட்டங்களில் தடை உத்தரவு இருப்பதால் அப்பணி நடைபெறவில்லை. மேலும், உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட கரூரில் வசிக்கும் நான், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இப்பணிக்கான விண்ணப்பதாரா்களில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அருகில் வசிப்பவா், அதே ஒன்றியம், அதே மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிபந்தனை காரணமாக, வேறு மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. ஆகவே, இந்த நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.