மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் முதன்முறையாக தமிழ்மொழியில் அச்சிடப்பட்ட பைகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இதுதொடா்பாக சு.வெங்கேடசன் எம்.பி. கூறும்போது, மதுரை கோட்ட அஞ்சல் பொருள்கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் அலுவல் மொழிகளான ஆங்கிலம், இந்தி மொழிகளே இதுவரை இருந்து வந்துள்ளன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன்முறையாக தமிழ் மொழியில் வாா்த்தைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.