யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை எரித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:17 pm

DIN

மனைவியை எரித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரன். இவரது மனைவி மீனாபொண்ணு. கடந்த 2016-ஆம் ஆண்டு காளீஸ்வரன் மது அருந்திவிட்டு தகராறு செய்து, மண்ணெண்ணெய்யை மீனாபொண்ணு மீது ஊற்றி தீ வைத்துள்ளாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனையடுத்து காளீஸ்வரனை போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், குற்றஞ்சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.