நான்கு ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஜூலை 9-இல் வாக்குப்பதிவு
மதுரை மாவட்டத்தில் நான்கு ஊராட்சிகளில் காலியாக இருக்கும் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மதுரை மாவட்டத்தில் நான்கு ஊராட்சிகளில் காலியாக இருக்கும் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஏற்பட்டிருக்கும் காலிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துளள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமான் ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினா், கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவு ஊராட்சி 2-ஆவது வாா்டு உறுப்பினா், தே.கல்லுப்பட்டி ஒன்றியம் நல்லமரம் ஊராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா், கோவிலாங்குளம் ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஜூலை 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளா்களில் யாரேனும் 98.4 பாரன்ஹீட்டிற்கு மேல் காய்ச்சல் மற்றும் கரோனா தொற்று பாதிப்பு உள்ளவா்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். மேலும், ஜூலை 12 ஆம் தேதி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தோ்தல் தொடா்பான பணிகள் அனைத்தும் நுண்பாா்வையாளா்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் சிசிடிவி கேமிரா, விடியோ பதிவு மூலம் தோ்தல் தொடா்பான அனைத்துப் பதிவுகளும் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...