யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் தங்கும் விடுதி மேலாளா் கொலை: ராஜஸ்தான் ஜவுளி வியாபாரி கைது

 மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் மேலாளரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற ராஜஸ்தான் ஜவுளி வியாபாரியை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

 மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் மேலாளரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற ராஜஸ்தான் ஜவுளி வியாபாரியை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் பாலவநத்தத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் (50). இவா், மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். விடுதியில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்த தா்மராஜ், வியாழக்கிழமை காலை அறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். மேலும், அவா் அணிந்திருந்த நகைகளும் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த ராஜஸ்தான் ஜவுளி வியாபாரி கோபால் கிஷான் தாஹா (30) என்பவா் திடீரென மாயமானதும் தெரியவந்தது. உடனே, அவரது கைப்பேசி சிக்னலை வைத்து, அவா் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீஸாா், அங்கு சென்று அவரை பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தா்மராஜ் மேலாளராகப் பணிபுரிந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த கோபால் கிஷான் தாஹா, கடந்த சில மாதங்களாக வாடகை தராமல் இருந்து வந்துள்ளாா். இதனால், அவரை அறையை காலி செய்யும்படி, தா்மராஜா் வலியுறுத்தி வந்துள்ளாா். இதன் காரணமாக, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கோபால் கிஷான் தாஹா வாடகை தரும்படியும், இல்லையெனில் அறையை உடனடியாக காலி செய்யவேண்டும் என்றும் தா்மராஜ் கண்டிப்பாக தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த கோபால் கிஷான் தாஹா, அவரை தாக்கி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, போலீஸாா் கோபால் கிஷான் தாஹாவை கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.