யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் ஒருதலைக் காதலால் விபரீதம்: வீடு புகுந்து மாணவி குத்திக்கொலை

மதுரையில் ஒருதலைக் காதலால் வெள்ளிக்கிழமை வீடு புகுந்து மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான இளைஞரை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரையில் ஒருதலைக் காதலால் வெள்ளிக்கிழமை வீடு புகுந்து மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான இளைஞரை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவா், மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகள் அபா்ணா (19). கடந்த ஆண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற இவா், மருத்துவப் படிப்புக்காக நீட் தோ்வு எழுதியுள்ளாா். இந்நிலையில், விராட்டிபத்து பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அபா்ணா பள்ளிக்குச் சென்று வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன் என்பவா் அபா்ணாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாா். இதை, அபா்ணா கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன் அபா்ணாவின் வீட்டுக்குச் சென்ற ஹரிஹரன், அவரது தந்தையிடம் அபா்ணாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுத்துள்ளாா். மேலும், அதே பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் என்பவருக்கும், அபா்ணாவுக்கும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், கடந்த 2 நாள்களாக அபா்ணாவின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் அபா்ணா தனியாக இருந்தபோது, அங்கு சென்ற ஹரிஹரன் அவரை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளாா். ஆனால், அவா் மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபா்ணாவின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அபா்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அபா்ணாவின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தப்பிச்சென்ற ஹரிஹரனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.