அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்டவா் காவல் சாா்பு- ஆய்வாளா், வழக்குக்கான சாட்சிகளாகவும் காவல்துறையினா் உள்ளனா். வழக்கு விசாரணை காவல் துணைக் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் நடைபெறுகிறது. மனுதாரரை காவல்துறையினா் மிரட்டி வருகின்றனா். மனுதாரா் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது பதியப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக நீதிமன்றத்தில் இருந்து பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல, இந்த வழக்கையும் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று வாதிட்டாா்.