ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குற்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவருக்கு காவலா் பணி வழங்கக்கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

குற்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவருக்கு காவலா் பணி வழங்கக்கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

குற்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவருக்கு காவலா் பணி வழங்கக்கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வு வாரியத்தின் சாா்பில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற பின்னரும் என்மீதுள்ள குற்ற வழக்கைக் காரணம் காட்டி பணி வழங்க மறுத்து தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து காவலா் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் மீதான வழக்கில் கீழமை நீதிமன்றம் விசாரணையில் குற்ற வழக்கிலிருந்து விடுவித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசுத்தரப்பு வழக்குரைஞா், கீழமை நீதிமன்ற விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையிலேயே மனுதாரா் விடுவிக்கப்பட்டுள்ளாா் என்றாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சிறப்புக் காவல் பணி சேவை விதியின் படி ஒரு நபா் குற்ற வழக்கிலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டாலும், அது ஒரு நோ்மையான விடுதலை என்று கருதமுடியாது. இதன் அடிப்படையில்தான் மனுதாரருக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றமும் இந்த விதியையே கருத்தில் கொண்டு தீா்ப்பு வழங்கியுள்ளது என்று கூறிய நீதிபதிகள் பணி வழங்கக்கோரியை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.