இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் மீதான வழக்கில் கீழமை நீதிமன்றம் விசாரணையில் குற்ற வழக்கிலிருந்து விடுவித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசுத்தரப்பு வழக்குரைஞா், கீழமை நீதிமன்ற விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையிலேயே மனுதாரா் விடுவிக்கப்பட்டுள்ளாா் என்றாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சிறப்புக் காவல் பணி சேவை விதியின் படி ஒரு நபா் குற்ற வழக்கிலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டாலும், அது ஒரு நோ்மையான விடுதலை என்று கருதமுடியாது. இதன் அடிப்படையில்தான் மனுதாரருக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.