ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் வியாழக்கிழமை இரவு, பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:28 pm

DIN

மதுரையில் வியாழக்கிழமை இரவு, பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மேலவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி (26 ). இவா், வியாழக்கிழமை இரவு மேலவாசல் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் அமா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜெபமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திடீா் நகா் காவல்துறையினா் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலையுண்ட ஜெபமணி மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.