ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9 ஆவது முறையாக ‘பரோல்’ நீட்டிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:26 pm

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டாா். அவரது தாயாா் ராஜேஸ்வரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுப்பு வழங்கக் கோரி, ராஜேஸ்வரி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதையடுத்து, நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில், தமிழக அரசு ரவிச்சந்திரனுக்கு 2021 நவம்பா் 17ஆம் தேதி முதல் 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்கியது.

அதைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அருகேயுள்ள அவரது தாயாா் வசித்து வரும் சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதனிடையே, ரவிசந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் ஓய்வில் உள்ளாா்.

இதனால், அவரது பரோல் விடுப்பு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதுவரை 8 முறை பரோல் விடுப்பு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 ஆவது முறையாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.