ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை

மதுரை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

கோடைக்குப் பிறகும் மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையானது, சீதோஷ்ண நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், மாலையில் லேசான மழைப் பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னா் மாலை 6 மணியிலிருந்து லேசான சாரலுடன் தொடங்கி சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கு சிரமப்பட்டனா். பல இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.